ஏழு வண்ண வானவில் தான் அழகு என்று எண்ணியிருந்தேன்,
கருமை நிற வானவில்லும் அழகு தான் “உன் புருவங்கள்”;
வண்ண வண்ண மீன்கள் தான் அழகாய் தெரிந்தன,
இன்று தான் அறிந்தேன் கருப்பு வெள்ளை மீன்களும்,
கொள்ளை அழகு என்று “உன் கண்கள்”;
தென்றல் காற்றின் சுகம் கூட தோற்றுப்போகின்றது,
உன் நாசியிலிருந்து வரும் மூச்சுக்காற்றின் முன்னே;
ரோஜா மலரின் நிறமும் மென்மையும் தோற்றுப்போகின்றன,
உன் இதழ்களின் முன்னே;
கடவுள் படைத்த கவிதையே,உன்னை பார்த்தேன்….
என் உளரல்கள் கவிதைகள் ஆகின்றன…
வீணை இல்லாமல் உன் விரல்கள் காற்றில் மீட்டும் காதல் இசையிலிருந்து…
மீண்டு வர இயலாமல் சிக்கித் தவிக்கின்றேன் கவிதையே…
-AARON DIVI